FreeWebSubmission.com TO KNOW MORE.....

Communion to the Sick


நோயில் துன்புறுவோருக்கு நற்கருணை வழங்கல்

பணி : தந்தை மகன் தூய ஆவியார் பெயராலே - ஆமென்

பணி : ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக…. 
            உம்மோடும் இருப்பதாக    (தீர்த்தம் தெளித்தல்…. )

மன்னிப்பு வழிபாடு

பணி : அன்புக்குரியவர்களே இந்த திருச்சடங்கில் நாம் தகுந்த உள்ளத்துடன் 
             பங்குபெற நமது பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்

 எல்லாம் வல்ல இறைவனிடமும்………………. மன்றாடுகிறேன்.

பணி : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து நம் பாவங்களை 
              மன்னித்து நம்மை நித்திய வாழ்வுக்கு அழைத்துச்செல்வாராக.

இறைவாக்கு வழிபாடு

யோவான் எழுதிய நற்செய்திலிருந்து வாசகம்   (6 : 54-55)

எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்.
-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

திருவிருந்து

பணி : நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்தபடி நாம் ஒருமித்து   
            நமது  சகோதரருக்காக மன்றாடுவோம்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தரதேயும் தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

பணி :      இதோ இறைவனின் செம்மறி இதோ உலகின் பாவங்களை 
                போக்குகின்றவர்   செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றவர்
                பேறுபெற்றவர்..
                            ஆண்டவரே…. …… ……. என் ஆன்மா குணமடையும்.

மன்றாடுவோமாக: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா எம் சகோதரர்…. (சகோதரி… ) உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருஉடலை உட்கொண்டுள்ளார். இது அவருடைய உடலுக்கும் ஆன்மாவுக்கும் மருந்தாகி நற்பயன் அளிப்பதாக. இதனால் இவர் விரைவில் உடல் நலம் பெற்று உமது திருவுளத்தை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட அருள்புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

பணி : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
உம்மோடும் இருப்பாராக
பணி : எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் உங்களை
            நிறைவாக ஆசிர்வதிப்பாராக.  – ஆமென்.

Christmas in Liturgy

     மனித வரலாற்றில் ஒரே ஒருவரின் பிறந்த நாள் மட்டுமே பெரு விழாவாக எல்லாக் காலத்தவராலும்> எல்லா நாட்டவராலும்> எல்லா மொழியினராலும்> எல்லா இனத்தவராலும் கொண்டாடப்படுகின்றது. அது தான் கிறிஸ்துவின் பிறப்பு - கிறிஸ்மஸ் பெருவிழா. காரணம் மற்ற மனிதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றில் தோன்றியவர்கள் ஆனால் கிறிஸ்துவோ கால வரலாற்றை தோற்றுவித்தவர் அவரது பிறப்பை வைத்து தான் காலமும் கி.மு கி.பி எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
ஓவ்வொரு மனிதனின் வாழ்கையிலும்> மதத்திலும் பல்வேறு விழாக்கள் இடம் பெறுவது இயற்கையே! கிறிஸ்துவத்தில் எந்த விழா கொண்டாப்பட்டாலும் அது திருப்பலியுடன் இணைந்து கொண்டாடுவதே சிறந்தது நல்லது. ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் நாம் கொண்டாடும் மாபெரும் விழா கிறிஸ்மஸ். இதை ஒவ்வொரும் கொண்டாட ஆசிப்பதும் விரும்பதும் இயற்கையானதே. திருச்சபையின்; வரலாற்றில் கிறிஸ்மஸ் விழாவில் மட்டும் தான் மூன்று விதமான திருப்பலிகள் நிறைவேற்றி கொண்டாட திருச்சபை பணிக்கிறது மற்ற எந்த விழாவுக்கும் இத்தனை சிறப்பு இல்லை.

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

திருச்சபையின் வரலாற்றில் மிகவும் குறிப்பாக திருவழிபாட்டு நிலையில் கிறிஸ்மஸ் பெருவிழாவை கண்ணோக்கினால் மூன்று வகையான திருப்பலியுடன் கொண்டாப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இப்படி மூன்று திருப்பலிகள் மாலை> நள்ளிரவு மற்றும் விடியற்காலம் என மூன்று ntt;;வேறு நேரங்களில் கொண்டாப்படுகிறது. இத்தகைய வழக்கம் ஏறக்குறைய 5ம் நூற்றாண்டுகளிலேயே உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறமுடியும். ஏனென்றால் 5ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட திருப்பலி புத்தகங்களான ஜெலாசியன் வெரோனா போன்ற திருப்பலி புத்தகங்களிலும் அதை தொடர்ந்து 6ம் நூற்றாண்டுகளில்; பயன்படுத்தப்பட்ட கிரகோரியன் திருப்பலி புத்தகத்திலும் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் திருப்பலி போன்று மூன்று வகையான திருப்பலிகள் இடம் பெற்றிருப்பதை காணமுடிகிறது.

இந்த மூன்று திருப்பலிகளும்; வௌ;வேறு வகையில் முக்கியத்தும் பெறுகிறது. முதல் அல்லது மாலைத் திருப்பலி வானதூதர்கள் திருப்பலி என்றும் இரண்டாம் அல்லது நள்ளிரவுத் திருப்பலி ஆட்டு இடையர்கள் திருப்பலி என்றும் விடியற்கால திருப்பலி வார்த்தை மனுவானர் திருப்பலி  என்றும் அந்தந்த திருப்பலியில் பயன்படுத்தப்படும் நற்செய்தி வாசகங்களை மையப்படுத்தி அழைக்கப்படுகிறது. இந்த மூன்று திருப்பலிகளும் முறையே 4> 5> 6 நூற்றாண்டிடுகளில் கொண்டாடப்பட்டுள்ளது. அதோடு புனித தாமஸ் அக்குவினாசின் கூற்றுப்படி மூன்று வகையான நிலையில் யேசுவின் பிறப்பை திருச்சபை கொண்டாடுகின்றது...
1) உடலோடு சதையோடு பிறந்தது>
2) ஒரு கால வட்டத்திற்குள் பிறந்தது>
3) உலக முழுமைக்கும் பிறந்தது
         என்று யேசுவின் பிறப்பை வகைப்படுத்துகிறார்.
     
திருச்சபையின் வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்; போது 4 முதல் 6 வரை உள்ள  நூற்றாண்டுகளில் கத்தோலிக்கம் வளர்ச்சியடைந்து வளர்ந்து வந்தநிலை. மிகவும் குறிப்பிட கூடிய நிலையில் உரோமையில் முக்கியமான மூன்று பேராலயங்கள் உருவாக்கப்பட்டு கிறிஸ்துவின் மறையுண்மைகள் கொண்டாடப்பட்டது.

1) மரியன்னை பேராலயம்>
2) Gdpj NgJU பேராலயம்>
3) புனித Nahthd;; பேராலயம்.

இந்த மூன்று பேராலாயங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களாக இன்றும் கருதப்படுகின்றன. கிறிஸ்துமஸ் நாளில் இந்த மூன்று இடங்களிலும் திருந்தந்தையின் தலைமையில் மாலை> நள்ளிரவு> விடியற்கால திருப்பலி என கொண்டாப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. ஏறக்குறைய 7ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு இதுபோல மூன்று திருப்பலிகள் கிறிஸ்மஸ் பெருவிழா நாளில் நடந்தது வழக்கமாக உள்ளது. அதே நிலையில் தான் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் விழாவன்று மூன்று வகையான திருப்பலிகளை நிறைவேற்ற திருச்சபை நம்மை பணிக்கிறது. இதன் அடிப்படையில் தான் இன்றும் பல இடங்களில் இதுபோல மூன்று திருப்பலிகள் நடைபெறுகின்றன. ஆனால் நள்ளிரவுத் திருப்பலிக்குத்தான் அதிகமான மக்கள் வருகை தந்து பங்கேற்பது குறிப்பிடக்கூடிய ஒன்று. கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் பிற சபையை சார்ந்தவர்களும் நள்ளிரவுச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை இன்றைய நாட்களில் கொண்டாடி மகிழ்வதைக் காணமுடிகிறது.

Saints in Liturgy

திருவழிபாட்டில் புனிதர்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை
  
        

         புதியதாக குழந்தை பிறந்தாலோ அல்லது புதியதாக கிறிஸ்தவ ஆலயங்கள் அல்லது நிருவனங்கள் உருவாக்கப்பட்டாலோ எந்த புனிதருடைய அல்லது புனிதையினுடைய பெயரை தேர்ந்தெடுப்பது அல்லது சூட்டுவது என சில சமயங்களில் குழம்பி விடுவோம் அல்லது எதற்கு புனிதர்களுடைய பெயரை சூட்டவேண்டும் தேவையில்லை என்ற நிலையும் வந்துவிடும். காரணம் அத்தகைய புனிதர்களின் பாதுகாப்பும், இறைநம்பிக்கையும் நமக்கு தேவை என்பதை நினைவு படுத்தி இறைபாதுகாப்பில் வளர புனிதர்களின் துணையை நாடுகிறோம். ஏனென்றால் எந்த ஒரு புனிதரும் விண்ணிலிருந்து வந்தவரல்ல மாறாக நம்மைப்போல் மனிதர்களாக பிறந்து, வாழ்ந்து, இறைவல்லமையில் திலைத்திருப்பவர்கள். அவர்களது வழிமுறை, வாழ்க்கைமுறை நமக்கு ஒரு சிறந்த துணையாக இருக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் மையப்படுத்தி ஏன் புனிதர்களை நினைவு கூறவேண்டும் என்பதை திருச்சபையின் வரலாற்று மற்றும் இறையியல் பின்னனிகளோடு புரிந்து கொள்ள முயல்வோம்.

சொல் விளக்கம்

        “புனிதர்” என்ற வார்த்தையின் பொருள் விளக்கம் காண மூலமொழிச் சொற்கள் மூலம் சொல் விளக்கம் காண முயல்வதே சிறந்தது. புனிதம் அல்லது புனிதர் என்பதை எபிரேய மொழியில் “குவதோஸ்” என்றும் கிரேக்க மொழியில் “ஆகியோன்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு “பிரித்தெடுக்கப்பட்ட” அல்லது “வேறுபடுத்தப்பட்ட” என்று வார்த்தையளவில் பொருள்கொள்ள முடியும். இதே நிலையில் தான் தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் புனிதம் என்பது கடவுளை குறிக்கக்கூடிய சொல்லாகவும், கடவுளை வழிபட பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருள்களையும், இடங்களையும் குறிக்கக் கூடியதாகவும, கடவுளை மட்டுமே சார்ந்ததாகவும் கருதி வந்தனர். மிகக்குறிப்பாக இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்தவர்கள் அனைவரையும் தொடக்க கால திருச்சபை புனிதர்கள் என்றே அழைத்துள்ளது. இன்னும் சிறப்பாக புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களை புனிதர்கள் என்று அழைத்துள்ளதை 1பேதுரு 2. 9 “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள்” என்று காணமுடிகிறது. இந்த நிலை இயேசுவுக்குள் திருமுழுக்கு பெற்றுள்ள அனைவரையும் புனித நிலைக்கு உயர்த்தக்கூடிய ஒன்றாகவே உள்ளது. இப்படி வார்த்தையின் பொருள் புரிந்துகொண்ட பிறகு அதனை தொடர்ந்து வரக்கூடியவைகளை புரிந்துகொள்வது எளிதாகும்.


யார் புனிதர்? 


         தொடக்க கால திருச்சபை மிக்குறிப்பாக வேத கலாபனை காலத்தில், இயேசுவுக்காக துன்ப துயரங்களை அனுபவித்து, தங்களது உயிரை துறந்த அனைத்து கிறிஸ்தவர்களையும் புனிதர்கள் என்றே தொடக்க நிலையில் அழைத்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து வந்த காலக்கட்டங்களில் யேசுவின் வார்த்தைகளை கடைபிடித்து யேசுவின் துன்பத்தை, போதனையை, வாழ்க்கையை தங்களது வாழ்க்கை சூழ்நிலைகளில் பின்பற்றி கடவுளையும் மற்றவரையும் அன்பு செய்து அத்தகைய அன்பை செயல்களில் வெளிப்படுத்தி வாழ்ந்தவர்களை புனிதர்கள் என்று திருச்சபை அழைத்துள்ளது. இதன் அடிப்படையில் அடுத்தவரில் இயேசுவைக் காண துடித்த பல நலல் உள்ளங்கள்  மிகக்குறிப்பாக உடல் நோயால் துன்புறுவோரில், ஏழைகளில், நோயாளிகளில், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்ட கடும் தவம் செபம் நோன்பால் யேசுவுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் என இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். எப்படி இருப்பினும் யேசுவின் வார்த்தைகளை, செயல்களை ஏதாவது ஒரு சில வழிகளில் கடைபிடித்து கடவுளின் அன்பை மற்றவரும் அனுபவித்து மகிழ துணைபுரிந்தவர்களே புனிதர்கள் என திருச்சபை அவர்களது மரணத்திற்குப் பிறகு சிறப்பித்து அழைக்கிறது. இத்தகைய நிலை தங்களுக்கு தாங்களாகவே கொடுத்துகொண்ட ஒன்றல்ல, மாறாக புனிதம் என்பது கடவுளின் கொடை. இவ்வுலக வாழ்க்கை நிலையில் மற்றவரும் கடவுளின் அன்பை பெற்று மகிழ துணைபுரிந்தவர்களை திருச்சபை அவர்களது இறப்பிற்கு பிறகும் நினைவு கூர்ந்து அவர்களை சிறப்பாக புனிதர்கள் என்ற பெயரில் அழைக்கிறது. ஏனெனில் எல்லா கிறிஸ்தவரும் இத்தகைய புனித நிலைக்கு உயர்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறது.

திருச்சபை வரலாற்றில் புனிதர் வணக்கம்


      முதலாம் நூற்றாண்டுகளில் புனிதர்களைப்பற்றியும் அவர்களுக்கு செலுத்தப்பட்ட வணக்கம் பற்றியும் தெளிவான கருத்துகள் இடம் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் ஏறக்குறைய 155 அல்லது 156 ம் ஆண்டுகளில் இருந்து புனிதர்களுக்கான சிறந்த வணக்கம் நடந்துள்ளதற்கான ஆதார சான்றுகள் உள்ளன. மிககுறிப்பாக மறைசாட்சியான சுமிர்னா நகர் ஆயர் போலிகார்ப் அவர்களின் எலும்புகளை கிறிஸ்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் மாற்றி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவர் இரத்தம் சிந்தி இறந்த நாளை இறைமகிமைக்கு உயர்தப்பட்ட பிறந்த நாளாக கொண்டாடியதை திருச்சபையின் வரலாற்று ஏடுகள் சான்று பகர்கின்றன. அதோடு மற்றுமொரு சான்று புனித சிப்பிரியன் (250) குருக்களுக்கு எழுதிய தனது கடிதத்தில் “கிறிஸ்துவுக்காக உயிர்தியாகம் செய்தவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அவர்களின் நினைவு நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் தவறாது கிறிஸ்தவர்கள் அவர்களின் கல்லறைகளில் ஒன்றுகூடி செபிக்க” அழைப்பு விடுத்துள்ளார்.


              இந்த நிலையில் தான் புனிதர் வணக்கம் தொடக்க கால திருச்சபையில் சிறப்பு பெற்றுள்ளதாக காண முடிகிறது. இத்தகைய புனிதர் வணக்கம் மறைசாட்சியர் மற்றும் மறைஆயர்களுக்கு என்று அவர்கள் வாழ்ந்து இறந்த மறைமாவட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. மறைசாட்சியர் என்பது “மார்த்தீரோன்” என்ற கிரேக்க வார்த்தயிலிருந்து வந்தது. இதற்கு “இரத்தம் சிந்தி கிறிஸ்துவுக்காக உயிர்தியாகம்” செய்தவர் என்று பொருள். இத்தகைய நிலையில் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்த புனிதர்களின் இறந்த நினைவுநாளில் தொடக்ககால திருச்சபை அவர்களது கல்லறைகளில் ஒன்று கூடி அவர்களோடு இணைந்து கடவுளுக்கு தங்களது செபங்களை அர்ப்பணித்ததை காணமுடிகிறது. அதோடு ஒரு குறிப்பிட்ட மறைமாவட்டத்தின் ஆயர் இறந்த ஆண்டு நினைவு நாளில் கிறிஸ்தவர்கள் ஆயரது கல்லறையில் ஒன்றுகூடிவந்து செபித்து தங்களது ஒன்றிப்பை அர்ப்பண செபங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி ஒவ்வொரு மறைமாவட்டமும் தனித்தனியாக இறந்த மறைசாட்சிகளை, மறை ஆயர்களை நினைவு கூர்ந்து ஒன்றுகூடி செபித்து வந்துள்ளது. இத்தகைய விழாக்களை நினைவு தினங்களாகவும் மேலும் இதைத் தொடர்ந்து இயேசுவுடன் வாழ்ந்து இறந்த திருத்தூதர்களின் இறப்பை திருவிழாவாகவும் கொண்டாடும் பழக்கம் ஏறக்குறைய 3-ம் நூற்றாண்டுகளிலிருந்து நடைமுறையில் இருந்துள்ளது.


உரோமையில்

           ஏறக்குறைய 2-ம் நூற்றாண்டுகள் வரை உரோமை நகரில் புனிதர் வணக்கம் சிறந்த நிலையில் இருந்ததாக சொல்லமுடியாது மாறாக குடும்ப அல்லது உறவினர்கள் என்ற அளவிலேயே இருந்துள்ளது. ஆனால் திருத்தந்தை இரண்டாம் சிக்டஸ் (258) மற்றும் அவருடன் 6 திருத்தொண்டர்கள் நெருப்பிலிடப்பட்டு மறைசாட்சிகளாக இறந்த பிறகு கிறிஸ்தவர்கள் சிறப்பாக அவர்களது கல்லறைகளில் ஒன்றுகூடி செபித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய உரோமையில் 313 க்கு பிறகு தான் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து இறந்தவர்களின் கல்லறைகளின் மேல் மறைசாட்சிகள் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. காரணம் 3-ம் நூற்றாண்டுகள் வரை வலேரியன் கொடுமைகளில் கிறிஸ்துவர்கள் அதிகமாகவே கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர் உயிர் தியாகம் செய்யும் நிலை அதிகமாகவே இருந்துள்ளது. மற்றொரு காரணம் கிறிஸ்தவம் ஒரு மதமாக அங்கிகரிக்கப்பட்ட பிறகு தான் இத்தகைய கொடுமைகள் தளர்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது. ஏறக்குறைய 3-ம் நூற்றாண்டுகளிலிருந்து புனிதர் என்பது இயேவுக்காக இறந்த ஒரு நபருக்கு பொருந்தக்கூடிய நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை காண முடிகிறது. இப்படி இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர்தியாகம் செய்த நபர்களின் இறந்த நினைவு நாளே அவர்களது விண்ணகப் பிறப்பின் நாளாக கருதி அன்றைய தினம் அவர்களது கல்லறைகளில் ஒன்றுகூடி இறைவார்த்தை பகிர்விலும, திருவிருந்து பகிர்வு கொண்டாட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதை தொடக்க கால திருச்சபை வரலாற்று ஏடுகள் எடுத்துரைக்கின்றன.


          ஏறக்குறைய 5 மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் வேரிட்டு வளர்ந்து வந்த கால கட்டம் ஒவ்வொரு கிறிஸ்துவ சமூகத்திலும் இத்தகைய மறைந்த மறைசாட்சிகளின் எண்ணிக்கையும் மறைஆயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. எனவே பல இடங்களில் மறைசாட்சிகளின் நினைவை மட்டும் கொண்டாடடினால் போதும் என கிறிஸ்தவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 10-ம் நூற்றாண்டுகளில் இத்தகைய புனிதர்களின் பட்டியலை தொகுத்து ஒருங்கிணைந்த உரோமை புனிதர் பட்டியலை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏறக்குறைய 11-ம் நூற்றாண்டில் இருந்த திருத்தந்தை 7-ம் கிரகோரி புனிதர்களை மறைசாட்சிகள்; மற்றும் மறைஆயர்கள் என இரண்டாக வகைப்படுத்தினார். இந்த காலக்கட்டத்தில் தான் புனிதர்களின் மன்றாட்டு (பிராத்தனை) திருச்சபையில் உருவானது. பல புனிதர்களின் பரிந்துபேசுதலை நினைவு கூறும் வகையிலும், தனிப்பட்ட புனிதரை நினைவு கூறும் அளவிலும் இத்தகைய மன்றாட்டுகள் இ;டம் பெற்றன. ஏறக்குறைய திரிதெந்தின் சங்கம் (15-ம் நூற்றாண்டுகள்) வரை உரோமை புனிதர்களின் பெயர் பட்டியல்படி புனிதர்களின் எண்ணிக்கை 270 ஆகத்தான் இருந்துள்ளது. ஆனால் 17ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கிறிஸ்தவருக்கு அவரது இறப்பிற்கு பிறகு கொடுக்கப்படுகிற சிறந்த இந்த புனித நிலையை நிர்ணயிக்கும் உரிமையை திருத்தந்தைக்கு உரிய அதிகாரமாகவும், ஒரு நபரை அவரது இறப்பிற்கு பிறகு அவர் வாழ்ந்து வந்த நிலை, அவரது போதனை, கடைபிடித்து வந்த நற்பண்புகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் உறுதி செய்யப்பட்டது.


           இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் மீண்டும் இந்த உரோமைப் புனிதர்களின் பெயர் பட்டியலை முறைபடுத்தியது. மிகக் குறிப்பாக அகில உலக கிறிஸ்தவர்களின் தேவையை மையப்படுத்த முயன்று பல புனிதர்களின் பெயரை நீக்கியும், சில புனிதர்களின் பெயர்களை சேர்த்தும் புதிய பட்டியலை உருவாக்கியது. மற்றும் புனிதர்களின் கொண்டாட்டங்களை 5 நிலைகளில் வகைப்படுத்தியது: மறைசாட்சியர், பெருவிழா, திருவிழா, நினைவு மற்றும் விருப்ப நினைவு என்று வழிபாட்டு நிலையில் கொண்டாட பணித்தது. இன்றும் நமது பங்கு ஆலயங்களில் உள்ள பலி பீடத்தில் ஏதாவது ஒரு புனிதர் அல்லது புனிதையரின் திருப்பண்டங்கள் பதிக்கப்படுவதும் தொடக்க கால திருச்சபை எவ்வாறு ஒரு குறிப்பிட்ட புனிதரின் இறந்த தினத்தன்று ஒன்று கூடி வந்து இறைவார்த்தை பகிர்விலும், திருவிருந்து பகிர்விலும் கலந்து கொண்டு இறைவனுக்கு புகழ் சேர்த்ததோ அதேபோல இயேசுவுக்குள் திருமுழுக்கு பெற்றுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் புனிதர்களோடு இணைந்து இறைவனுக்கு நன்றிபலி செலுத்த பலிபீடத்தின் முன் ஒன்றுகூடி செபிக்க பணிக்கப் படுகிறது. பல சமயத்தில் நமது பங்கு அல்லது நிறுவனத்தில் உள்ள பலிபீடத்தில் பதிக்கப்பட்டுள்ள அருளியக்கம் எந்த புனிதர் அல்லது புனிதையருடையது என்பதுமே தெரியாமல் இருந்து விடுகிறது.

புனிதர் வணக்கம் தேவையா ? தவறானதா?

   
     சில சமயங்களில் நமது கிறிஸ்தவ வழிபாட்டு செயல்களில் ஆர்வமில்லாமல் ஈடுபடும் போது ஏற்படும் நிலை தான் நாம் செய்வது சரியானதா? அல்லது தவறானதா? என்ற சந்தேக நிலைக்கு நம்மை தள்ளிவிடுகிறது. நம்முடைய வழிபாடுகள் மூலமாக கடவுளை மட்டுமே நாம் ஆராதிக்கின்றோம். மாறாக அன்னை மரியாவுக்கு செலுத்துவது உயர்வணக்கம் என்றும், மற்ற புனிதர்களுக்கு செலுத்துவது மரியாதை அல்லது வணக்கம் என்று திருச்சபை வரையறுத்து தந்துள்ளது. சில சமயங்களில் புனிதர் வணக்கம் குறித்து விவிலியத்தில் ஒன்றுமில்லையே அப்படியென்றால் நாம் செய்வது தவறு தானே என்று நம்மில் ஒருசிலர் நினைக்கக் கூடும். ஆனால் புனிதர் வணக்கம் கடவுளுக்கு எதிரானதல்ல மாறாக புனிதர்கள் மூலம் இன்னும் நமது கிறிஸ்தவ வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற துணைபுரிபவை என்று எண்ணுதல் சாலச்சிறந்ததாகும்.

1. ஓவ்வொரு புனிதரும் ஏதாவது ஒருவிதத்தில் கடவுளை பிறருக்கு வெளிப்படுத்தியவர்கள், அல்லது வாழ்ந்து காட்டியவர்கள். எனவே தான் திருப்பலியில் பயன்படுத்தப்படும் புனிதர்களின் தொடக்கவுரையில் “உம் புனிதர்கள் நடுவில் இறைவா நீர் புகழ்பெறுகிறீர்” என்று செபிக்கிறோம். கடவுளை பின்பற்றுதல் எளிதாக இருக்காது அதே வேளையில் நம்மைப் போல் மனிதராக வாழ்ந்து பல வழி நிலைகளில் கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்து காட்டியவர்களது வழிமுறையை பின்பற்றுவது மனிதர்களாகிய நமக்கு எளிதாக தோன்றும்.

2. புனிதர்கள் கிறிஸ்துவ விசுவாசப்பயணத்தில் முன்மாதிரி எனவே தான் தொடக்க திருச்சபையிலிருந்து புனிதர்களின் பரிந்துரையை தேடி சென்றுள்ளனர்.

3. புனிதர்களில் வாழ்க்கை முறையை பின்பற்றி கடவுளை மகிமைபடுத்த மேற்கொள்ளும் முயற்சி. இதன் மூலம் நமது வாழ்வை நெறிபடுத்த துணைபுரியக்கூடியது.

4. புனிதர்கள் இயேசுவுடன் இணைந்து அவரது பாடுகள், மரணம், துன்பத்தின் மூலம் மரணத்தை தழுவி இறைவனுடன் இணைந்திருப்பவர்கள்.

5. கடவுளுடன் சிறந்த நிலையில் உறவு கொண்டு செயல்பட்டவர்கள். இறைவல்லமையை தங்களது வாழ்வில் உணர்ந்து கொண்டவர்கள்.

6. திருப்பலியில் நினைவுகூர்ந்து செபிக்கும் சபை மன்றாட்டில் இறைவனுடன் ஒரு தனிப்பட்ட புனிதர் எவ்வாறு சிறந்த உறவு கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது, நம்மையும் அத்தகைய ஒருசில நிலைகளில் செயல்பட அழைக்கிறது அல்லது தூண்டுகிறது.

7. தனிப்பட்ட புனிதர் பக்தி முயற்சியை நம்மில் உருவாக்குகிறது. அவர்களின் ஒருசில வாழ்க்கை முறைகளையாவது பின்பற்ற நம்மை உற்சாகப் படுத்துகிறது.

8. நமது கிறிஸ்துவ வாழ்வோடு நெருக்கம் கொண்டவர்கள் மற்றும் நமக்கு சிறந்த ஒரு முன் உதாரணமாக திகழ்பவர்கள் புனிதர்கள்.

9. நமது விசுவாசப்பயணத்தில் இறை நம்பிக்கையில் வளர துணை புரிபவர்கள்.

10. நற்செய்தி வார்த்தைகளை, வழிமுறைகளை தங்களது வாழ்வாக்கி நம்மையும் அத்தகைய நிலையில் வாழ, வளர, செயல்பட அழைக்கின்றனர்.


          திருச்சபையில் புனிதர்கள் இறை நம்பிக்கைக்கு முன்மாதிரியானவர்கள். எனவே தான் அவர்களது சாட்சிய வாழ்வை செயல்களை நினைத்து திருச்சபை அவர்களது இறப்பிற்கு பிறகு சிறந்த இடம் தந்து சிறப்பிக்கிறது. அவர்கள் மூலம் நமது வேண்டுதல் விண்ணப்பங்களை இறைவனிடம் சமர்பிக்க ஒரு வழியாக அமைந்தது. ஓவ்வொரு முறையும் வழிபாட்டு கொண்டாடங்களில் சிறப்பாக திருப்பலியில் புனிதர்களின் பெயரை உச்சரித்து ஒன்றுகூடி செபிக்கும் பழக்கம் உள்ளதை தொடக்க காலத் திருச்சபை சுட்டி காட்டி உணர்த்துகிறது.


         மண்ணில் வாழ்ந்து வரும் இந்த மனித சமூதாயம் புனிதர்களின் பரிந்துரையால் புனித வாழ்வில் பங்கு பெற அழைக்கப்படுகிறது. புனிதர்கள் வாழ்வில் கடைபிடித்து வந்த சிறந்த, உயர்ந்த ஆன்மீக வழிமுறைகளை திருவழிபாட்டு செபங்களில் நினைவுகூர்ந்து அருள் வழியில் வாழ, வளர நமக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இயேசுவை பின்செல்ல தூண்டுதலாக இருந்த இறைவார்த்தை அல்லது நற்காரியச் செயல்களை மையப்படுத்தி திருப்பலி செபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறைவனுடன் புனிதர்களுக்கு உள்ள உறவை புதுப்பித்து நமது கிறிஸ்தவ வாழ்வில் இறைவனோடும் அடுத்தவரோடும் உள்ள அன்புறவில் வளர துணைபுரிகின்றன. அதோடு எவ்வாறு ஒவ்வொரு புனிதரும் தங்களது வாழ்வால், செயலால் ஏதாவது ஒரு தனிpவிதத்தில் இறைவனுடன் உள்ள தனி உறவில் ஒன்றித்து வாழ துணைபுரிந்தது என்பதை கண்டுகொண்டு நம்மையும் ஏதாவது சில வழிநிலைகளில் இறைஉறவில் வளர துணை புரிகின்றன.


       நமது இந்திய மண்ணில் வாழ்ந்து இறந்த அன்னை தெரெசாவை அறியாதவர் யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களது நிறுவனங்களைப் போன்று எத்தனையோ நிறுவனங்கள் செயல்படுவதை அறிவோம். ஆனால் எத்தனை எதிர்ப்புகள் மத்தியிலும் அவர்களால் மட்டுமே சிறந்த ஒரு சேவையை செய்ய முடிந்தது என்றால் அது அவர்களது தனிசக்தியால் அல்ல மாறாக இறைசக்தியால் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தான் ஒரு முறை அன்னை தெரெசாவை பார்த்து ஒரு நாட்டின் அதிபர் கேட்டாராம் நீங்கள் இந்த நோயாளிகளின் புண்களை துடைத்து மருத்துவம் பார்க்கும் செயலுக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை எனக்கு ஊதியம் கொடுத்தாலும் நான் செய்ய மாட்டேன் என்று சொன்னதற்கு அன்னை தெரெசா எனக்கு பத்து லட்சம் ரூபாய் வரை ஊதியம் கொடுத்தாலும் நானும் செய்ய மாட்டேன் ஆனால் இந்த துன்புறும் நபரில் நான் இயேசுவை காண்கிறேன் எனவே நான் இத்தகைய பணிகளை இயேசுவுக்காக செய்கிறேன் என்று பதில் தந்தார்களாம். இறைவனது அன்பு அடுத்தவரை மிகக் குறிப்பாக தேவையில் இருப்பவரை அன்பு செய்வதில் தான் நிறைவு பெறுகிறது. ஓவ்வொரு புனிதரும் ஏதாவது ஒரு வகையில் இப்படி இயேசுவின் மதிப்பீடுகளை தங்களது வாழ்வாக்கியவர்கள். எனவே தான் திருச்சபை அவர்களது இறப்பிற்குப் பிறகும் அவர்களது வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி இயேசுவின் சாட்சிகளாக வாழ, செயல்பட அழைப்பு தருகிறது.
Classmates Gathering at Yercaud, 2010


NVSC, Pune 2009



     

With My Parents
Family

As Small boy with Rev. Sr. Pushpa

First Mass Reception at Pudur, 9.4.1997

First Mass 9.4.1997

With My Family

As a Staff of GSS

Priestly Ordination 8.4.1997

Ordination 1997

Ordination 1997

St. Peter's Basilica, Rome 2005

Betlahem 2005

Good Student Award 1986

First Year Philosophy, Bangalore

Diaconate

Diaconate

Minor Seminarian 1988

Way of the Cross - History

               சிலுவைப்பாதை : வரலாறும் போதனையும்
                                
இயேசுவின் பாடுகளை சிந்தித்து தியானிக்க திருச்சபை நமக்கு தந்துள்ள நாட்களே தவக்கால நாட்கள். இந்த நாட்களில் கிறிஸ்துவர்களாகிய நாம் மேற்கொள்ளும் மிகச் சிறந்த பக்தி முயற்ச்சிகளுள் ஒன்று தான் சிலுவைப்பாதை பக்தி முயற்சி. இந்த பக்தி முயற்சியில் பங்கு பெறும்போது இயேசுவின் துன்பத்தில் நாமும் பங்குகொண்டு நமது வாழ்வை முறைப்படுத்தி வாழ நமக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. திருச்சபை இந்த தவக்கால நாட்களில் சிலுவைப் பாதை பக்தி முயற்சியை கடைப்பிடித்து தனி,பொது வாழ்வில் மாற்றம் காண நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறது. இந்த சிலுவைப்பாதை பக்தி முயற்சி எப்படி உருவானது வளர்ச்சி கண்டுள்ளது என்பதனை அதன் வரலாற்றுப் பின்னனியுடன் அறிந்து கொள்ள முயல்வோம்.

வரலாற்றுப் பார்வை

திருச்சபையின் ஆரம்ப காலக் கட்டத்தில் கிறிஸ்துவர்களுக்கு மிக முக்கியமான நகரங்களாக இருந்தது உரோமை மற்றும் பாலஸ்த{னம். ஏனென்றால் இயேசு பிறந்து வாழ்ந்த நகரம் பாலஸ்தீனம். இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் அறைந்த இடம் எருசலேம். அதே போல் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இயேசுவின் சீடர் பேதுரு உரோமை நகருக்குச் சென்று போதித்து மக்களை கிறிஸ்துவர்களாக மாற வழிகாட்டுகிறார். ஏறக்குறைய திருச்சபையின் ஆரம்ப காலக்கட்டத்தில் 4-5 நூற்றாண்டுகளில் தான் கிறிஸ்துவ மதம் காண்ஸ்டன்டைன் என்ற மன்னரால் அங்கிகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கிறிஸ்துவ மதத்தின் புண்ணிய பூமியான எருசலேமுக்கு திருப்பயணம் மேற்கொண்டு இயேசு பிறந்து வாழ்ந்த மற்றும் சிலுவையில் அறையப்பட்ட இடங்களை காண பல இடங்களிலிருந்து மக்கள் திருபயணம் மேற்கொண்டனர். மிக முக்கியமாக எருசலேம் நகர வீதிகளில் இயேசு சிலுவை சுமந்து சென்ற சாலைகளில் மக்கள் சேர்ந்து செபித்து,பாடல்கள் பாடி,யேசுவின் பாடுகளை சிந்தித்து வந்துள்ளதை திருச்சபையில் ஆரம்ப கால முதலே அறிய முடிகிறது.    
 

இதே காலக் கட்டத்தில் கிறிஸ்துவ விசுவாச நிலையை வெளிப்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு வகையான ஓவியங்கள் சித்தரிக்கப்பட்டு மக்களது பார்வைக்கு வைக்கப்பட்டது. காலஞ் செல்லச் செல்ல இத்தகைய அழகிய ஓவியங்களை கண்டு மக்கள் செபிக்கக்கூடிய நிலைகள் திருச்சபையில் உருவாயின. ஏறக்குறைய 6ம் நூற்றாண்டுகளில் இத்தாலிய நாட்டிலுள்ள பொலோனா என்ற இடத்தில் வாழ்ந்து வந்த புனித ஸ்டீபன் மடாதிபதிகள் எருசலேமை சித்தரிக்கக்கூடிய காட்சிகளையும் இடங்களையும் வரைந்து அதிலும் குறிப்பாக யேசுவின் பாடுகளை சித்தரிக்கூடிய ஓவியங்களை தங்களது இல்லத்திலே வரைந்து வைத்து யேசுவின் பாடுகளை தங்களது மடத்திலே சிந்திக்கலாயினர்.


அதே போன்று திருச்சபையின் ஆரம்ப காலத்திலே ஓவியம்,கலை,சிற்பம் மூலம் யேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை மையப்படுத்தி கிறிஸ்துவ ஆலயங்களிலும் அதன் சுற்றுப் புறமும் வைக்கப்பட்டு திருப்பயணிகள் பக்தியை கடைபிடித்து புனித இடங்களை சந்தித்து செபிக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது. இத்தகைய நிலைகள் உரோமை மற்றும் எருசலேம் பகுதிகளில் அதிகமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த நிலையில் தான் சிலுவைப்பாதை பக்திமுயற்சியும் திருச்சபையில் உருவானது.


சிலுவைப்பாதை பக்தி முயற்சி உருவாக காரணமாக இருந்த இடம் புண்ணிய பூமியான எருசலேம் தான். ஏறக்குறைய 10ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் எருசலேம் நகரில் நல்ல சாலைகள் அமைத்து பக்தர்கள் பக்தியாக பாடல்கள் பாடி செபித்து செல்லக்கூடிய நிலை உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 1342 ஆண்டுகளில் புனித பூமியானது பிரான்சிஸ்கன் சபை துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டு திருப்பயணிகளை கவரக்கூடிய வகையில் பக்திமுயற்சிகள் உருவாக்கப்பட கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலே குறிப்பிடப்பட்ட சாலைகளில் ஒரு சில காட்சிகளை சித்தரித்து குறிப்பாக அன்னை மரியாள் யேசுவை காணுதல், எருசலேம் நகர் பெண்களிடம் உரையாடுதல், சிமியோனை சந்தித்தல், படைவீரர்கள் யேசுவின் உடைகளை களைதல், சிலுவையில் அறைதல் போன்ற யேசுவின் பாடுகளை ஓவியங்களாகவும் சிற்பங்களாவும் வடிவமைத்துள்ளனர். 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகள் வரை 20 மற்றும் 30க்கும் மேற்பட்ட நிலைகளை உள்ளடக்கியதாக சிலுவைப்பாதை பக்திமுயற்சிகள் அமைந்திருந்தன. இதை 1462 ல் புண்ணிய பூமிக்கு திருப்பயணம்; மேற்கொண்ட இங்கிலாந்து நாட்டு “வில்லியம் வே” குறிப்பிட்டுக் காட்டுகிறார். அதோடு சித்தரிக்கப்பட்டுள்ள யேசுவின் பாடுகள் தியானிப்பதற்கு உதவியாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். 16ம் நூற்றாண்டுகளில் தான் “14” ஸ்தலங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டு வரையறை செய்யப்பட்டது. 1686 திருத்தந்தை இன்னொசெண்ட் முக்கியமான மடாதிபதிகள் வாழும் இடங்களில் சிலுவைப்பாதை பக்தியைக் கடைபிடிக்க ஆணையிடுகிறார்.


திருத்தந்தை பெனடிட் (1726) ஒவ்வொரு கிறிஸ்தவனும் இந்த பக்தி முயற்சியை மேற்கொள்ளவும் அதன் மூலம் பலனை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆணை பிறப்பிக்கிறார்.. அதன்பின் திருத்தந்தை கிளாமெண்ட் (1731)எல்லா கோயில்கள், பேராலயங்கள், திருத்தல வளாகங்கள், சிற்றாலயங்கள் கல்லறைத்தோட்டகளிலும்; இந்த பக்தி முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என கிறிஸ்துவ மக்களை பணிக்கிறர். அதன் அடிப்படையில் 17 ம் நூற்றாண்டுகளிலிருந்து இந்த பக்தி முயற்சி திருச்சபையில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது என்பதை உணரலாம்.  


சிலுவைப்பாதையின் போதனை


என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து தன் சிலுவையை நாள்தோறும் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும் (மத் 16.. 24) என்பது இயேசு ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் அழைப்பு.

சிலுவைப் பாதை வெறும் வெளிச்சடங்கல்ல:
பரிதாபப்பட்டு கண்ணீர் வடிப்பதற்குமல்ல:
மாறாக, நம் வாழ்வை சீர்தூக்கி பார்க்கும் வாய்ப்பு:
இறைவனுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு:


சிலுவைப்பாதை நம் வாழ்க்கைப் பாதையாக மாறும் போது நாம் ஒவ்வொருவரும் மறுகிறிஸ்துவாக மாற முடியும். இதற்காகக்தான், இறைவன் தன் மகன் இயேசுவின் மூலம் இத்தனை துன்பங்களை நாம் உணர்ந்து பங்கேற்க வாய்ப்பு தருகிறார்.

யூத மக்கள் சிலுவையை அவமானத்தின் சின்னமாகத்தான் கருதி கொலை பாதகர்களையும் நாட்டுத் துரோகிகளையும் தண்டிக்க பயன்படுத்தினர்.  இத்தகைய சிலுவை மரணம் ஒரு மனிதனுக்கு வாய்க்கின்ற அவலத் தீர்ப்பு தான். அவமானத்தின் சின்னமாகிய சிலுவை இயேசுவின் மரணத்தினால் மகிமை பெறுகிறது (1 கொரி 1. 18). இயேவின் சிலுவை வெற்றியின் சின்னம். மனுக்குலமனைத்திற்கும் பலியான மாசற்ற செம்மறி அதில் தொங்கி இறந்து நமக்கு மீட்பைப் பெற்றுத்தந்தார். இடறலாக கருதப்பட்ட சிலுவை மனித குலம் முழுமைக்கும் வாழ்வுப் பாதையாகவும் அவரது காயங்களாலே நாம் குணம் பெற்றுக் கொள்ளவும் முடிந்தது (1 பேதுரு 2. 24). எனவே தான் மனிதர்களுக்கு மடமையாக எண்ணப்பட்ட சிலுவைச் சின்னம் இயேசுவின் இறப்பினால் வாழ்வின் ஊற்றாக உருவெடுக்கிறது.


பாலைவனத்தில் கொள்ளிவாய் பாம்புகளால் கடியுண்டவர்கள் நலமடைய மோயீசன் வெண்கலப் பாம்பை கம்பத்தில் ஏற்றினார். அதை உற்று நோக்கிய அனைவரும் உயிர் பெற்றார்கள். (எண் 21. 9) அதே போன்று தான் இயேசுவின் சிலுவைச் சாவு மனித இனம் முழுவதிற்கும் அருள் வாழ்வை பெற்றுத் தருகிறது.

அதோடு சிலுவையிலே விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே தொங்குகிற இயேசு கடவுளையும் மனிதனையும் இணைக்கும் இணைப்பின் பாலமாக இருக்கிறார். படைப்பின் தொடக்கத்திலிருந்த உறவு நிலையில் ஏற்பட்ட விரிசலை இயேசு தனது உயிரை சிலுவையில் அர்ப்பணித்ததன் மூலம் கடவுளையும் மனிதனையும் இணைக்கின்ற உறவுப் பாலமாகத் திகழ்கின்றார். பலியும் பலிப் பொருளுமாகிய இயேசு பலியாகப் போகும் கழுமரத்தை தானே சுமந்து சென்று தன்னுயிரைக் கொடுத்ததன் மூலம் கடவுளையும் மனிதனையும் இணைக்கிறார்.

அதோடு சிலுவையிலே இயேசு மனிதனையும்-மனிதனையும் இணைக்கிறார். இயேசுவின் சிலுவையில் இருபக்கமும் இரு மனிதர்கள் அறையப்பட்டிருந்தனர். இதன் மூலம் மனிதனை மனிதனுடன் இணைக்கும் உறவின் பாலமாக இருந்து தன்னையே மனிதனுடன் ஒன்றிணைக்கிறார். சின்னஞ்சிறிய சகோதரனுக்கு செய்த உதவிகளை எனக்கே செய்தீர்கள். இயேசுவின் இறப்பால்; மனிதன் மனிதனுடன் இணைக்கப்படுகின்றான். ஏனென்றால் சிலுவையின் மகத்துவமே இறையன்பிலும் பிறரன்பிலும் இணைவதில் தான் அடங்கியுள்ளது இணைவதுதான் சிலுவையின் சிறப்பு.  இந்த இரண்டையும் பிரிக்க முடியாது ஒன்றில்லாமல் மற்றது இல்லை ஏனென்றால் சிலுவைக்கு எப்படி குறுக்குச் சட்டமும் நெடுச் சட்டமும் அவசியமோ அதைப் போன்றது தான் நமது கிறிஸ்துவ வாழ்வும்.


சிலுவைப் பாதையின் பயணம் நமது தேவைகளுக்காக நாம் மேற்கொள்ளும்; திருயாத்திரை அல்ல: மாறாக இயேசுவின் மனநிலை,மதிப்பீடுகள்,நெஞ்சுரம் நமது அன்றாட கிறிஸ்துவ வாழ்வுக்குத் தேவை என்பதற்காகத் தான் சிலுவைப் பயணம். இயேசுவின் பாதையில் நடப்போம்: புதிய மனிதர்களாய் உறவை ஏற்படுத்தும் உன்னதர்களாய் புனிதர்களாய் வாழ உறுதி எடுப்போம். இனிவரும் நாட்களில் இயேசுவே நம் பாதையாகவும் பயணமாகவும் மாறவேண்டும். உள்ளங்கள் உறவின் உறைவிடமாக வேண்டும். ஏதோ கடமைக்காக கலந்து கொள்ளாமல் இயேசுவின் சிலுவைப்பாதை நம் வாழ்க்கைப் பாதையாக அமையவேண்டுமென்ற சிந்தனையோடும் இறை மனித உறவை வளர்க்கும் ஆர்வத்துடனும் பங்கேற்றால் நமது தனி வாழ்வும் பொது வாழ்வும் நிச்சயம் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகமேயில்லை.

History of Christmas


வரலாற்றில் கிறிஸ்துமஸ்

டிசம்பர் மாதமென்றாலே சற்று குளிர் நடுக்கம் இருப்பது இயற்க்கையின் நிலை. அதோடு நமது நினைவிற்க்கு வருவது நாம் கொண்டாடும் இயேசுவின் பிறப்பு பெருவிழா. எல்லா இடங்களையும் அழகு செய்து வாழ்த்துகளை சொல்லி புத்தாடைகள் அணிந்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற ஒரு விழா கிறிஸ்மஸ் விழா தான். எல்லா மதத்தினரும் உணர்ந்துகொள்ளும் விழா இதுதான் என்றால் இது மிகையல்ல. இப்படி இன்று நாம் கொண்டாடிவரும் இப்பெருவிழாவை வரலாற்றின் அடிப்படையில் அறிந்து கொள்ள முயல்வோம்.

   வரலாற்று ஆதாரங்களை புரட்டிப்பார்த்தல் ஒரு குறிப்பட்;ட நாளிலோ அல்லது காலக்கட்டத்திலோ கிறிஸ்மஸ் கொண்டப்பட்டது என்று உறுதியிட்டு கூறமுடியாது. ஆனால் மக்கள் மத்தியிலே பல்வேறு வகையான கொண்டாட்டங்கள் இருந்ததை காணமுடிகிறது. பல்வேறு நாடுகளில் மிகவும் குறிப்பாக குளிர் நிறைந்த நாட்களில் விழாக்கள் கொண்டாடியதை பார்க்க முயலும்போது பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி செல்லவேண்டும்.

மெசபட்டோமிய மரபுப்படி குளிர் காலத்தில் (டிசம்பர் ஐனவரி)அவர்களது புத்தாண்டை 12 நாட்கள் கொண்டாடியுள்ளனர். இவர்கள்; பல கடவுள்களை வழிபட்டு வந்தவர்கள். இதில் “மார்துக்” என்ற கடவுளை எல்லா கடவுள்களிலும் பெரிய முதன்மையான கடவுளாக எண்ணினர். புத்தாண்டு தினத்தன்று கடவுள் “மார்துக்” போரிட்டு தீமை செய்தவர்களை அழிப்பது வழக்கமாக நம்பப்பட்டது விழாவாக கொண்டாடப்பட்டது. இதே போன்று பாரசீகம் பாபிலோனியாலியா பழைய கிரேக்கம் போன்ற பகுதிகளிலும் டிசம்பர் – ஜனவரி மாதங்களில் பல்வேறு முக்கியமான விழாக்கள் கொண்டாப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. இந்த நாட்களில் நகரின் முக்கிய தெருக்களில் நடனமாடி உறவினர்கள் நண்பர்களை சந்தித்து வாழ்த்துக் கூறி சிறப்புவிருந்து அன்பளிப்புகள் கொடுத்தல் ஆகியவை குறிப்பிடக்கூடிய அளவில் இடம் பெற்றுள்ளன.

இதே காலக்கட்டத்தில் வாழ்ந்து வந்த உரோமையர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் யேசுவின் உயிர்ப்பை மட்டுமே பெருவிழாவாக கொண்டாடி வந்துள்ளனர். ஏனென்;றால் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் கிறிஸ்துவம் ஒரு அங்கிகரிக்கப்;பட்ட மதமாகவோ அரசியல் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாகவோ இல்லை. எனவே பல்வேறுபட்ட துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் உட்பட்டது.

பல்வேறு வகையான துன்பங்களை கொடுமைகளை அனுபவித்த காலக் கட்டத்தில்  இவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடியதாக ஒன்றும் குறிக்கப்படவில்லை. அதே வேளையில் திருச்சபையின் ஆரம்ப காலக்கட்டத்தில் வாழ்ந்து வந்த பல்வேறுபட்ட அறிஞர்கள் பல்வேறு வகையான கருத்துகளை தருகிறார்கள். அதன் அடிப்படையில் “டியனோசியஸ் எக்சிகுஸ்” என்பவரின் கூற்றுப்படி கி மு 4 நூற்றாண்டிலிருந்து பல்வேறு முக்கிய இடங்களில் கிறிஸ்துவம் வேரூண்ற ஆரம்பித்தது. எகிப்து அந்தியோருக்கு எருசலேம் உரோமை அலெக்சான்திரியா போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்கள் சிலர் கிறிஸ்துவர்களாகவும் மற்றும் பலர் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இப்படி பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் டிசம்பர் 25ந்தேதியின்று தங்களது குல தெய்வமான “சூரிய கடவுளின்” பிறந்த நாளை கொண்டாடி வந்துள்ளனர். கிறிஸ்துவம் பரவி வந்த அந்த காலக்கட்டத்தில் பலர் கிறிஸ்துவர்களாகவும் மாறினர். ஆனால் தங்களது பழைய பழக்க வழக்கங்களை மாற்ற இயலாத நிலையில் தங்களது வழக்கமான விழாவான சூரிய கடவுளின் பிறந்த நாளை டிசம்பர் 25 கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதே சமயத்தில் கிறிஸ்துவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டுகளில் (321) டிசம்பர் 25ம் தேதியின்று இரண்டு விழாக்களையும் கொண்;டாட சட்டம் இயற்றப்பட்டதையும் அந்த நாளை விடுமுறை நாளாக கடைபிடித்துள்ளதையும் அறிய முடிகிறது. நாட்கள் செல்லச் செல்ல கிறிஸ்துவ மதம் வளர்ச்சி கண்;டது. அதே வேளையில் கிறிஸ்துவம் ஒரு மதம் என்ற நிலையை அடைந்தது அரசும் அங்கிகரித்து ஏற்றுக்கொண்;டது. ஏறக்குறைய 353-ஆண்டில் திருத்தந்தை முதலாம் ஜுலியஸ் என்பவர் டிசம்பர் 25 அன்று யேசுவின் பிறப்பை கொண்டாட திருச்சபையில் அனுமதி வழங்கினார். ஆனால் 440க்கு பிறகுதான் கிறிஸ்மஸ் ஒரு பெருவிழா என்ற நிலையில் உணர்ந்து கொண்டாடப்பட்டதாக அறிய முடிகிறது.

நான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த புனித அகுஸ்தினார் குறிப்படுகிறார். “இது (கிறிஸ்மஸ்) ஒரு தனி விழா அல்ல மாறாக மீட்பை மையப்படுத்தி இன்றே நமது மீட்பு உதயமானது” என்ற நிலையில் உணர்ந்து கொண்டாட வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

Leadership of Jesus

இயேசுவின் தலைமைத்துவம்: பாதம் கழுவும் இயேசு
         
           உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு நோக்கத்துடன் தான் வாழ்கிறான், செயல்படுகிறான். இன்றைய மனிதன் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியைக் கண்டு ஆனந்தமடைகிறான்.  ஒவ்வொரு மனிதனும் ஒரு உயர்ந்த நிலையில் வாழ வேண்டும், வளர வேண்டும் மேன்மையான முதன்மையான பதவிகளை வகிக்க வேண்டும் கை நிறைய சம்பளம் வாங்கக்கூடிய அளவிற்கு பட்டம் பதவிகள் கிடைக்க வேண்டும் என்பது கடினப்பட்டு உழைத்து வாழ்வை நடத்துகின்ற ஒவ்வொரு குடும்பத்தின் எண்ணமும் கவலையுமாக உள்ளது.  அதே வேளையில் வேறு சிலர் தங்களது பதவியை தலைமை பொறுப்பை தக்க வைத்து கொள்ள எப்படியெல்லாம் செயல்படலாம் நற்பெயரை காத்து கொள்ளலாம் மற்றவரை மட்டம் தட்டி தான் முன்னேறலாம் என்ற சுயநலப் போக்குடன் செயல்படுவதையும் கண்கூடாக காண முடிகிறது.  இதற்கெல்லாம் மாறான ஒருநிலையில் யேசுவின் தலமைத்துவம் மையப்படுத்துகிறது இந்த பாதம் கழுவும் நிகழ்வின் மூலம.; ஒவ்வொருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பணியில் தன்னையும் தனது திறமைகளையும் முதன்மைப்படுத்தி தன்னுடன் பணிபுரியும் சக மனிதனை நேசிக்க, மதிக்க, அன்புசெய்ய மறந்துவிட்ட நிலையை மாற்றி உண்மையான அன்பின் பண்பு நலன்களில் வளர துணைபுரிய வேண்டும்.

    இயேசுவின் பாதம் கழுவும் இந்த செயல் ஒவ்வொரு நபரையும் இணைக்கவும், கடவுளின் அன்பை உணரவும் செய்கின்ற உன்னதமான நிலை. இயேசு கடவுளின் மகன் ஏன் தன்னையே தாழ்த்த வேண்டும். ஆதுவும் ஒரு அடிமையின் நிலைக்கு தன்னைத் தாழ்த்தக் காரணம் என்ன? மனிதத்தை அன்பு செய்யதன் செயல்பாடுதானே.


பேதுருவின் பார்வையில் இயேசு ஒரு பெரிய போதகராக, மெசியாவாக, தலைவராக கருதப்படுகிறார். இயேசுவைத் தலைவராக ஏற்றுக் கொண்ட சீடர்கள் தங்களது தலைவருக்கு பணிபுரியும் நபர்களாகத்தான் நினைத்தனர். ஆனால் மனிதத்தை மதித்கும் இயேசுவின் பணி தனியான, வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. எனவேதான் பேதுருவால் இத்தகைய நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. பேதுருவின் பாதங்களை கழுவ இயேசு முன் வந்த போதும் மறுப்பு தெரிவிக்கிறார். பிறகு யேசுவின் பணியில் பங்கு கொள்ள உரிமை தரும் நிலை என்பதை யேசுவின் மூலம் விளக்கம் கண்டு முன்வருகிறார் முழுவதும். 
    

    இயேசுவின் குண நலன்களில் அதிமாக வெளிப்படுத்தப்படுவது அவரது அன்பு. தமது அன்பை முழுமையாக வெளிப்படுத்துவதில் எந்தவித தயக்கமோ கலக்கமோ இல்லை என்பது நமக்கு தெளிவாக புலப்படுகிறது, இந்த பணிந்து செயல்படும் நிகழ்வில் நன்றாக வெளிப்படுகிறது. உண்மையான அன்பு என்பது எப்போதுமே அதிமான தாழ்ச்சி மற்றும் நான் என்ற தன்னல போக்குகளைக் கடந்தது. உண்மையான எந்த அன்பர்களுக்கிடையேயும் கேவலாமான அல்லது கீழ்த்தரமான செயல்கள் என இனம் காணமுடியாது.  அதே வேளையில் அதிகாரத்துடன், ஆணவத்துடன், மற்றவர்களை மதியாத எண்ணங்களுடன் செயல்படுகின்ற எந்த ஒரு நபருடைய வாழ்விலும் செயலிலும் மட்டம் தட்டுகின்ற, கேவலமான, கீழ்த்தரமான செயல்கள் என பிரித்து செயல்படுவதை காணமுடியும்.
       

     இயேசுவின் நிலை கடவுளுடன் இணைந்த இறுக்கமான நிலைதான். இயேசுவின் எண்ணத்திலும், பார்வையிலும், செயல்களிலும் முதன்மைபடுத்தப் பட்டவர்கள் தந்தையாம் இறைவனும் அடிமட்ட நிலையில் துன்புறுகின்ற ஏழைகளுமே. மனிதனையும் கடவுளையும் முழுமையாக அன்பு செய்யக்கூடிய நபர்களால் மட்டுமே தெய்வீக வல்லமையின் செயல்களை கண்டு உணர முடியும் வெறும் மனித சக்தியால் மட்டுமே  புரிந்து கொள்ள முடியாது.
           

        பாதங்களைக் கழுவுகின்ற செயல் யூத மத நடைமுறையில் இருந்த ஒன்று. விருந்துக்கு உறவினர்களின் வீடுகளைத் தேடி பல மைல் தூரம் நடந்து காலணி இல்லாமல் புழுதிபடிந்த பாதைகளில் வருகின்ற நபர்களில் பாதங்கள் கறைபடிந்து இருப்பதை நாம் கற்பனை செய்து பார்த்தால் தான் இந்த உண்மையை புரிந்து கொள்ள முடியும்.  இப்படி விருந்தினர்கள் வீடுகளுக்கு வரும்போது கறைபடிந்துள்ள பாதங்களை கழுவ அடிமைகள் வேலையாட்கள் அமர்த்தப் படுவதும் இயல்பான ஒன்று.  இப்படி பாதங்களை கழுவிய பிறகு தான் விருந்துகளில் கலந்து கொள்வதும் முறையான செயலாக மதிக்கப் பட்டது. 
          
        
          இந்த வரலாற்று நிகழ்வுகளை நோக்கும் போது நம்மில் பலருக்கு இயேசுவில் செயல் ஒரு சாதாரண செயல்தானே எனத் தென்படலாம். யூத வரலாற்றில் விருந்தினர்களின் பாதங்களை எந்த ஒரு வீட்டுத் தலைவனும் கழுவியதில்லை மாறாக இத்தகைய செயல்கள் மதிப்பில்லதா செயல்களாக கீழ்த்தரமான செயல்களாக கருதினார்கள். ஏனவே அதற்கென தனி வேலையாட்களை அமர்த்தி விருந்தினர்களின் பாதங்களை கழுவும் செயல்கள் நடந்தன. ஆனால் இயேசுவில் செயல்பாடு சதாரமான அல்லது ஒரு இயல்பான செயல்பாடு அல்ல. காரணம் தலைவராக விளங்கும் இயேசு தன்னையே பணியாளாக, வேலைக்காரனாக மற்றிகொண்டு பணிபுரிவது தான் இயேசுவின் தனித்தன்மை.  கடவுளும் மனிதனுமானவர் தன்னையே ஒரு அடிமையின் நிலைக்கு தாழ்த்தக்கூடிய அந்த பணிநிலை தான் மகத்துவமான செயல்.  இது எல்லா சாதாரண மனிதருக்கும் வந்துவிடாது. கடவுளையும் மனிதனையும் மையப்படுத்துகின்ற நபர்களால் மட்டுமே முடியும்.  குடவுளுடன் உள்ள உறவிலும் சக மனிதனுடன் உள்ள உறவிலும் நிலைத்து நீடித்து நிற்கின்ற மனிதனாலே இத்தகைய அளவுகடந்த அன்பு நிலைகளை பரிமாறிக் கொள்ள முடியும்.

அருள்பணி. S. எம்மானுவேல், நல்லாயன் குருத்துவக் கல்லூரி, கோவை.