FreeWebSubmission.com TO KNOW MORE.....: Christmas in Liturgy

Christmas in Liturgy

     மனித வரலாற்றில் ஒரே ஒருவரின் பிறந்த நாள் மட்டுமே பெரு விழாவாக எல்லாக் காலத்தவராலும்> எல்லா நாட்டவராலும்> எல்லா மொழியினராலும்> எல்லா இனத்தவராலும் கொண்டாடப்படுகின்றது. அது தான் கிறிஸ்துவின் பிறப்பு - கிறிஸ்மஸ் பெருவிழா. காரணம் மற்ற மனிதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றில் தோன்றியவர்கள் ஆனால் கிறிஸ்துவோ கால வரலாற்றை தோற்றுவித்தவர் அவரது பிறப்பை வைத்து தான் காலமும் கி.மு கி.பி எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
ஓவ்வொரு மனிதனின் வாழ்கையிலும்> மதத்திலும் பல்வேறு விழாக்கள் இடம் பெறுவது இயற்கையே! கிறிஸ்துவத்தில் எந்த விழா கொண்டாப்பட்டாலும் அது திருப்பலியுடன் இணைந்து கொண்டாடுவதே சிறந்தது நல்லது. ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் நாம் கொண்டாடும் மாபெரும் விழா கிறிஸ்மஸ். இதை ஒவ்வொரும் கொண்டாட ஆசிப்பதும் விரும்பதும் இயற்கையானதே. திருச்சபையின்; வரலாற்றில் கிறிஸ்மஸ் விழாவில் மட்டும் தான் மூன்று விதமான திருப்பலிகள் நிறைவேற்றி கொண்டாட திருச்சபை பணிக்கிறது மற்ற எந்த விழாவுக்கும் இத்தனை சிறப்பு இல்லை.

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

திருச்சபையின் வரலாற்றில் மிகவும் குறிப்பாக திருவழிபாட்டு நிலையில் கிறிஸ்மஸ் பெருவிழாவை கண்ணோக்கினால் மூன்று வகையான திருப்பலியுடன் கொண்டாப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இப்படி மூன்று திருப்பலிகள் மாலை> நள்ளிரவு மற்றும் விடியற்காலம் என மூன்று ntt;;வேறு நேரங்களில் கொண்டாப்படுகிறது. இத்தகைய வழக்கம் ஏறக்குறைய 5ம் நூற்றாண்டுகளிலேயே உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறமுடியும். ஏனென்றால் 5ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட திருப்பலி புத்தகங்களான ஜெலாசியன் வெரோனா போன்ற திருப்பலி புத்தகங்களிலும் அதை தொடர்ந்து 6ம் நூற்றாண்டுகளில்; பயன்படுத்தப்பட்ட கிரகோரியன் திருப்பலி புத்தகத்திலும் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் திருப்பலி போன்று மூன்று வகையான திருப்பலிகள் இடம் பெற்றிருப்பதை காணமுடிகிறது.

இந்த மூன்று திருப்பலிகளும்; வௌ;வேறு வகையில் முக்கியத்தும் பெறுகிறது. முதல் அல்லது மாலைத் திருப்பலி வானதூதர்கள் திருப்பலி என்றும் இரண்டாம் அல்லது நள்ளிரவுத் திருப்பலி ஆட்டு இடையர்கள் திருப்பலி என்றும் விடியற்கால திருப்பலி வார்த்தை மனுவானர் திருப்பலி  என்றும் அந்தந்த திருப்பலியில் பயன்படுத்தப்படும் நற்செய்தி வாசகங்களை மையப்படுத்தி அழைக்கப்படுகிறது. இந்த மூன்று திருப்பலிகளும் முறையே 4> 5> 6 நூற்றாண்டிடுகளில் கொண்டாடப்பட்டுள்ளது. அதோடு புனித தாமஸ் அக்குவினாசின் கூற்றுப்படி மூன்று வகையான நிலையில் யேசுவின் பிறப்பை திருச்சபை கொண்டாடுகின்றது...
1) உடலோடு சதையோடு பிறந்தது>
2) ஒரு கால வட்டத்திற்குள் பிறந்தது>
3) உலக முழுமைக்கும் பிறந்தது
         என்று யேசுவின் பிறப்பை வகைப்படுத்துகிறார்.
     
திருச்சபையின் வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்; போது 4 முதல் 6 வரை உள்ள  நூற்றாண்டுகளில் கத்தோலிக்கம் வளர்ச்சியடைந்து வளர்ந்து வந்தநிலை. மிகவும் குறிப்பிட கூடிய நிலையில் உரோமையில் முக்கியமான மூன்று பேராலயங்கள் உருவாக்கப்பட்டு கிறிஸ்துவின் மறையுண்மைகள் கொண்டாடப்பட்டது.

1) மரியன்னை பேராலயம்>
2) Gdpj NgJU பேராலயம்>
3) புனித Nahthd;; பேராலயம்.

இந்த மூன்று பேராலாயங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களாக இன்றும் கருதப்படுகின்றன. கிறிஸ்துமஸ் நாளில் இந்த மூன்று இடங்களிலும் திருந்தந்தையின் தலைமையில் மாலை> நள்ளிரவு> விடியற்கால திருப்பலி என கொண்டாப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. ஏறக்குறைய 7ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு இதுபோல மூன்று திருப்பலிகள் கிறிஸ்மஸ் பெருவிழா நாளில் நடந்தது வழக்கமாக உள்ளது. அதே நிலையில் தான் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் விழாவன்று மூன்று வகையான திருப்பலிகளை நிறைவேற்ற திருச்சபை நம்மை பணிக்கிறது. இதன் அடிப்படையில் தான் இன்றும் பல இடங்களில் இதுபோல மூன்று திருப்பலிகள் நடைபெறுகின்றன. ஆனால் நள்ளிரவுத் திருப்பலிக்குத்தான் அதிகமான மக்கள் வருகை தந்து பங்கேற்பது குறிப்பிடக்கூடிய ஒன்று. கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் பிற சபையை சார்ந்தவர்களும் நள்ளிரவுச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை இன்றைய நாட்களில் கொண்டாடி மகிழ்வதைக் காணமுடிகிறது.

No comments: