FreeWebSubmission.com TO KNOW MORE.....
St.Peter's Basilica Rome

Rome, Colosseum

St. Anselm University, Rome

Service and Transformation

Mission in Pentateuch


Ajantha Caves



Ajanta Caves

Marriage Mass (Lighting of the Lamp)


திருமணதிருப்பலி 

முன்னுரை(குத்துவிளக்குஏற்றல்)

கடவுளின் படைப்புத் திட்டத்தில் முதலில் “ஒளி தோன்றுக” என்றார். ஓளி தோன்றிற்று. ஆம்! கடவுள் வார்த்தையால் உலகை உருவாக்கினார்.    (…. முதல் திரி : பங்கு குரு)

அப்பொழுது கடவுள் மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்குவோம். என்றார். மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் பின்பு ஆண்டவர் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்கு தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆகவே ஆண்டவர் மனிதனிடமிருந்து விலா எலும்பு ஒன்றை எடுத்து ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்போது மனிதன் ‘இதோ என் எலும்பின் எலும்பும்இ சதையின் சதையும் ஆனவள்’ என்றான்.  
                             ( 2ம் திரி : பெற்றோர் 1)

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி ‘பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள்’ என்றார். இவ்வாறு கடவுள் முதல் குடும்பதை ஆசிர்வதித்துஇ உருவாக்கினார். (3ம் திரி பெற்றோர் 2) 

இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டு தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான் இருவரும் ஒரே உடலாய் இருப்பர். (மாற் 10:8 ) “இனி இவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல் எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்”  
                          (4 ம் திரி மணமக்கள்). 

நீங்கள் பெற்றுக் கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி அமைதியுடன் இணைந்து வாழ்ந்து தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். (எபேசி 4 1-3). 

 உலகை உண்டாக்கி அதில் குடும்பத்தை உருவாக்கிய இறைவன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக திருமணத்தை ஒரு திருவருட்சாதனமாக உயர்த்தினார்.  
                          ( 5 ம் திரி திருப்பலி நிறைவேற்றும் குரு) 

தூய ஆவியார் வழியாக இறைவன் இன்றும் நம்மோடு இருந்து நம்மை நடத்துகிறார் என்பதை உணர்ந்தவர்களாய் நமது குற்றங்குறைகளை எண்ணி மனம் வருந்தி திருமண வாழ்வில் இணைய உள்ள இந்த மணமக்களுக்காக  இத்திருப்பலியில் பங்கேற்று செபிப்போம்.

Communion to the Sick


நோயில் துன்புறுவோருக்கு நற்கருணை வழங்கல்

பணி : தந்தை மகன் தூய ஆவியார் பெயராலே - ஆமென்

பணி : ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக…. 
            உம்மோடும் இருப்பதாக    (தீர்த்தம் தெளித்தல்…. )

மன்னிப்பு வழிபாடு

பணி : அன்புக்குரியவர்களே இந்த திருச்சடங்கில் நாம் தகுந்த உள்ளத்துடன் 
             பங்குபெற நமது பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்

 எல்லாம் வல்ல இறைவனிடமும்………………. மன்றாடுகிறேன்.

பணி : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து நம் பாவங்களை 
              மன்னித்து நம்மை நித்திய வாழ்வுக்கு அழைத்துச்செல்வாராக.

இறைவாக்கு வழிபாடு

யோவான் எழுதிய நற்செய்திலிருந்து வாசகம்   (6 : 54-55)

எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்.
-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

திருவிருந்து

பணி : நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்தபடி நாம் ஒருமித்து   
            நமது  சகோதரருக்காக மன்றாடுவோம்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தரதேயும் தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

பணி :      இதோ இறைவனின் செம்மறி இதோ உலகின் பாவங்களை 
                போக்குகின்றவர்   செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றவர்
                பேறுபெற்றவர்..
                            ஆண்டவரே…. …… ……. என் ஆன்மா குணமடையும்.

மன்றாடுவோமாக: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா எம் சகோதரர்…. (சகோதரி… ) உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருஉடலை உட்கொண்டுள்ளார். இது அவருடைய உடலுக்கும் ஆன்மாவுக்கும் மருந்தாகி நற்பயன் அளிப்பதாக. இதனால் இவர் விரைவில் உடல் நலம் பெற்று உமது திருவுளத்தை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட அருள்புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

பணி : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
உம்மோடும் இருப்பாராக
பணி : எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் உங்களை
            நிறைவாக ஆசிர்வதிப்பாராக.  – ஆமென்.

Christmas in Liturgy

     மனித வரலாற்றில் ஒரே ஒருவரின் பிறந்த நாள் மட்டுமே பெரு விழாவாக எல்லாக் காலத்தவராலும்> எல்லா நாட்டவராலும்> எல்லா மொழியினராலும்> எல்லா இனத்தவராலும் கொண்டாடப்படுகின்றது. அது தான் கிறிஸ்துவின் பிறப்பு - கிறிஸ்மஸ் பெருவிழா. காரணம் மற்ற மனிதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றில் தோன்றியவர்கள் ஆனால் கிறிஸ்துவோ கால வரலாற்றை தோற்றுவித்தவர் அவரது பிறப்பை வைத்து தான் காலமும் கி.மு கி.பி எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
ஓவ்வொரு மனிதனின் வாழ்கையிலும்> மதத்திலும் பல்வேறு விழாக்கள் இடம் பெறுவது இயற்கையே! கிறிஸ்துவத்தில் எந்த விழா கொண்டாப்பட்டாலும் அது திருப்பலியுடன் இணைந்து கொண்டாடுவதே சிறந்தது நல்லது. ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் நாம் கொண்டாடும் மாபெரும் விழா கிறிஸ்மஸ். இதை ஒவ்வொரும் கொண்டாட ஆசிப்பதும் விரும்பதும் இயற்கையானதே. திருச்சபையின்; வரலாற்றில் கிறிஸ்மஸ் விழாவில் மட்டும் தான் மூன்று விதமான திருப்பலிகள் நிறைவேற்றி கொண்டாட திருச்சபை பணிக்கிறது மற்ற எந்த விழாவுக்கும் இத்தனை சிறப்பு இல்லை.

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

திருச்சபையின் வரலாற்றில் மிகவும் குறிப்பாக திருவழிபாட்டு நிலையில் கிறிஸ்மஸ் பெருவிழாவை கண்ணோக்கினால் மூன்று வகையான திருப்பலியுடன் கொண்டாப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இப்படி மூன்று திருப்பலிகள் மாலை> நள்ளிரவு மற்றும் விடியற்காலம் என மூன்று ntt;;வேறு நேரங்களில் கொண்டாப்படுகிறது. இத்தகைய வழக்கம் ஏறக்குறைய 5ம் நூற்றாண்டுகளிலேயே உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறமுடியும். ஏனென்றால் 5ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட திருப்பலி புத்தகங்களான ஜெலாசியன் வெரோனா போன்ற திருப்பலி புத்தகங்களிலும் அதை தொடர்ந்து 6ம் நூற்றாண்டுகளில்; பயன்படுத்தப்பட்ட கிரகோரியன் திருப்பலி புத்தகத்திலும் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் திருப்பலி போன்று மூன்று வகையான திருப்பலிகள் இடம் பெற்றிருப்பதை காணமுடிகிறது.

இந்த மூன்று திருப்பலிகளும்; வௌ;வேறு வகையில் முக்கியத்தும் பெறுகிறது. முதல் அல்லது மாலைத் திருப்பலி வானதூதர்கள் திருப்பலி என்றும் இரண்டாம் அல்லது நள்ளிரவுத் திருப்பலி ஆட்டு இடையர்கள் திருப்பலி என்றும் விடியற்கால திருப்பலி வார்த்தை மனுவானர் திருப்பலி  என்றும் அந்தந்த திருப்பலியில் பயன்படுத்தப்படும் நற்செய்தி வாசகங்களை மையப்படுத்தி அழைக்கப்படுகிறது. இந்த மூன்று திருப்பலிகளும் முறையே 4> 5> 6 நூற்றாண்டிடுகளில் கொண்டாடப்பட்டுள்ளது. அதோடு புனித தாமஸ் அக்குவினாசின் கூற்றுப்படி மூன்று வகையான நிலையில் யேசுவின் பிறப்பை திருச்சபை கொண்டாடுகின்றது...
1) உடலோடு சதையோடு பிறந்தது>
2) ஒரு கால வட்டத்திற்குள் பிறந்தது>
3) உலக முழுமைக்கும் பிறந்தது
         என்று யேசுவின் பிறப்பை வகைப்படுத்துகிறார்.
     
திருச்சபையின் வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்; போது 4 முதல் 6 வரை உள்ள  நூற்றாண்டுகளில் கத்தோலிக்கம் வளர்ச்சியடைந்து வளர்ந்து வந்தநிலை. மிகவும் குறிப்பிட கூடிய நிலையில் உரோமையில் முக்கியமான மூன்று பேராலயங்கள் உருவாக்கப்பட்டு கிறிஸ்துவின் மறையுண்மைகள் கொண்டாடப்பட்டது.

1) மரியன்னை பேராலயம்>
2) Gdpj NgJU பேராலயம்>
3) புனித Nahthd;; பேராலயம்.

இந்த மூன்று பேராலாயங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களாக இன்றும் கருதப்படுகின்றன. கிறிஸ்துமஸ் நாளில் இந்த மூன்று இடங்களிலும் திருந்தந்தையின் தலைமையில் மாலை> நள்ளிரவு> விடியற்கால திருப்பலி என கொண்டாப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. ஏறக்குறைய 7ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு இதுபோல மூன்று திருப்பலிகள் கிறிஸ்மஸ் பெருவிழா நாளில் நடந்தது வழக்கமாக உள்ளது. அதே நிலையில் தான் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் விழாவன்று மூன்று வகையான திருப்பலிகளை நிறைவேற்ற திருச்சபை நம்மை பணிக்கிறது. இதன் அடிப்படையில் தான் இன்றும் பல இடங்களில் இதுபோல மூன்று திருப்பலிகள் நடைபெறுகின்றன. ஆனால் நள்ளிரவுத் திருப்பலிக்குத்தான் அதிகமான மக்கள் வருகை தந்து பங்கேற்பது குறிப்பிடக்கூடிய ஒன்று. கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் பிற சபையை சார்ந்தவர்களும் நள்ளிரவுச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை இன்றைய நாட்களில் கொண்டாடி மகிழ்வதைக் காணமுடிகிறது.